நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

 

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் கடற்கரை பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை, நேற்று சனிக்கிழமை இரவு 08.00 மணியளவில், களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, அஸ்லம் வீதி, நிந்தவூர் 07 பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2 கிராம் 580 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கைது நடவடிக்கையானது களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் பிரதான பொலிஸ் பரிசோதகர் என் எல். கிரிசாந்தவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.