நாட்டில் இந்த ஆண்டு இது வரை 42 துப்பாக்கிச் சூடுகள் பதிவு

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 42 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், 25 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் பெரும்பாலானவை பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் போதைப்பொருள் முரண்பாடுகளுடன் தொடர்புடையவை என பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை மே மாதம் 3 ஆம் திகதியான நேற்று முன் தினம் சனிக்கிழமை மீட்டியாகொடாவில் உள்ள உணவகம் அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு துப்பாக்கிதாரிகள் ரி – 56 துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் ஒருவர் உயிர் இழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மே மாதம் 4 ஆம் திகதியான நேற்று களுத்துறை, நாகோடாவில் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மே மாதம் 5 ஆம் திகதியான இன்று அதிகாலையில் கல்கிஸ்ஸ கடற்கரை சாலையில் 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, குறித்த விடயம் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்