நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன், வடக்கு, வடமத்திய, தெற்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளில் காற்றானது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்