
தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு : ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி
இந்தியா பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புது தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. ஆட்டோ சாரதி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள். இதில் 2வது மகள் ஆர்த்திகா வயது 17. இவர் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா. நடந்து முடிந்த அரசு பொதுத் தேர்வை எழுதி இருந்தார். தேர்வை எழுதி விட்டு வந்த நாளிலிருந்து சரியாக தேர்வு எழுதவில்லை என்று பெற்றோரிடம் சொல்லி அடிக்கடி புலம்பி வந்துள்ளார்
தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்திலேயே ஆர்த்திகா இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தோல்வி பயத்தில் இருந்து ஆர்த்தியா இன்று காலை 7 மணி அளவில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகைக்குச் சென்று தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்த்திகா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தவுடன் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிவுக்கு பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வு தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாபநாசம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்