
தைத்த ஆடைகளின் விலைகள் 40 வீதமாக உயர்வு
தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்தார்.
மின்சாரத் தடை, டொலர் பற்றாக்குறை மற்றும் மூலப் பொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு தைத்த ஆடைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மஹரகம பமுனுவ பகுதியில் புத்தாண்டு காலத்தில் 200, 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தைத்த ஆடை கள் தற்பொழுது 800 முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.
தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யப்படும் மூலப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.
600 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நூலை 1800 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.
சிறு ஆடை உற்பத்தி நிலையங்கள் மின்சாரத் தடையினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.