
தேர்தல் வேட்பாளர்களுக்கான அறிவித்தல்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் எண். 03இன் படி, எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் தங்கள் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் தங்கள் தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.