தேர்தல் சட்டங்களை மீறிய 33 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில்இ 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து இன்று காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் 349 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா – பூந்தோட்டம் பகுதி மக்களுக்கு வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரின் மூலம் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அஞ்சல் பணியாளர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்