
துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்
காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி காஷ்மீரின் பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குதிரை ஓட்டி உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவிவருகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்ற ஆணை, சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தான் மக்கள் இந்தியா வர தடை, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைப்பு, சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு என பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்