
திருமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொறி தீக்கிரை
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொறி தீக்கிரையாகியுள்ளது.
குறித்த வியாபார நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனமானது நேற்றைய தினம் இரவு தீப்பற்றிய நிலையில் திருகோணமலை நகரசபை தீயாணைப்பு வீரர்களால் தீயானது அருகில் இருக்கும் கட்டடங்களுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும் தீ பரவலுக்கான காரணம் இன்னமும் அறியப்படாத் நிலையில் திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்