
திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன
-கிண்ணியா நிருபர்-
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்