தன்னார்வ ரீதியாக ஒன்று சேர்ந்த இளைஞர்களின் முன்மாதிரியான செயல்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பூரண அனுசரனையோடு, கருகம்பனை பொது அமைப்புகளும், விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும், இணைந்து நடாத்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை, நேற்று சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு கருகம்பனை சந்தியில் ஆரம்பமானது.

இதில் கிராம சேவையாளர், பொது சுகாதார பரிசோதகர், கிராமத்தவர்கள், இளைஞர்கள் பிரதேச சபை ஊழியர்கள், விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.