ஜப்பானை தாக்கவுள்ள மெகா நிலநடுக்கம் ? 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்

ஜப்பானின் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 8 முதல் 9 வரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவிகிதம் உள்ளதாகவும் , இப்பகுதி நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 இலட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த வாரம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சியூட்டும் இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் எதிர்பாரா பேரழிவுகளை தரும் சுனாமி பேரலைகளை தூண்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பேரழிவால் சுமார் 3 இலட்சம் பேர் வரை பலியாகவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஜப்பானின் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 8 முதல் 9 வரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவிகிதம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க