
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனா சென்றடைந்தார்!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில், சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில், சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றதோடு, சீன இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.