
சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் பிரபலங்கள்
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஒரே இரவில் அறுவடை செய்துள்ளார் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி. குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூரியவன்ஷி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர், முதல் இளம் வீரர் என்ற சாதனைகளைப் படைத்தார்.
சிக்சருடன் ஐபிஎலில் சதம் விளாசிய இந்திய இளம் வீரர் என்ற அரிய சாதனையையும் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார். முன்னதாக 17 பந்துகளில் அரை சதம் கடந்த வைபவ் சூரியவன்ஷி, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஜியோ ஹாட்ஸ்டார் இல் ஜியோஸ்டார் நிபுணர் சஞ்சய் பாங்கார், குஹ்ல் ரசிகர்கள் போட்டி மைய நேரலை நிகழ்ச்சியில் பேசும்போது, “இவ்வளவு அற்புதமான ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது, இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் 14 அல்லது 15 வயதில் வெளிவந்தார், ஆனால் அவர் ரஞ்சி, துலீப் ட்ரோஃபி போன்றவற்றில் ஆடிய பிறகு தேசிய அணிக்குப் போனார். பார்த்திவ் படேல் ரஞ்சி அனுபவமில்லாமல் இந்தியா டெஸ்ட் அணிக்காக விளையாடி ஒரு டெஸ்ட் போட்டியை காப்பாற்றினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்