சூடானில் வைத்தியசாலை மீது குண்டுத் தாக்குதல்: 7 பேர் பலி

தெற்கு சூடானில் உள்ள வைத்தியசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.