சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு மார்ச் மாதத்தில் 2,29,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாட்களாக மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது. இதன்போது 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை இதுவரை 7,22,276 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க