சில மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு

மே தினக் கூட்டங்கள் இடம்பெறும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகள் இன்று வியாழக்கிழமை மூடப்படுகின்றன.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்கிவரும் விடுதிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களின் பேரணி மற்றும் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இந்தநிலையில், மே தினப் பேரணிகள், கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்