சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

பண்டாரவளையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் காணாமல் போன 16 வயதுடைய சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக அடம்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் தனது மகள் ரத்நாயக்க முதியன்சேலாகே கவிஷா தேவமணி காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாயாரின் முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

5 அடி 2 அங்குல உயரம் கொண்ட கவிஷா தேவமணி, இறுதியாக வெளிர் பச்சை நிற ஆடை அணிந்திருந்தார், மேலும் அவரது இடது கையில் முழங்கைக்கு அருகில் சிறிய வெட்டு காயம் ஏற்பட்ட அடையாளம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் அடம்பிட்டிய பொறுப்பு அதிகாரி தொலைபேசி இலக்கமான 071-8591528 அல்லது அடம்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 055-2295466 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்