சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கான விலை அதிகரிப்பு!
மதுவரி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு கட்டங்களின் கீழ் திருத்தப்பட்டுள்ளது.
சராசரியாக மதுபான போத்தல் ஒன்றின் விலை 6 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சிகரெட் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 4 கட்டங்களின் கீழ் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாயினாலும், 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்