சாவகச்சேரி பகுதியில் பகல் வேளையில் திருட்டு சம்பவம்!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி – ஆசிரியர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை பகல் வேளையில் திருடப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த 8 பவுண் நகைகள், 200 கனேடியன் டொலர் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் இலங்கைப் பணம் ஆகியன திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்