சாரதி ஒருவர் மீது ஏனைய சாரதிகள் இணைந்து தாக்குதல்

செயலி மூலம் முச்சக்கரவண்டி ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்திய சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பலாலி வீதியில்,  திருநெல்வேலி பழம் வீதி அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றது

யாழில் சமீப காலமாக குறித்த பிரச்சினை தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது