சம்மாந்துறையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சாரணர் முகாமைத்துவ பயிற்சி

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு படையணியினர் அனர்த்த காலங்களில் சாரணர் முறைகள் மூலம் எவ்வாறு பொதுமக்களை பராமரித்தல் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அல் உஸ்வா இஸ்லாமிக் நலன்புரி அமைப்பும் இணைந்து 200 மணித்தியாலம் கொண்ட பயிற்சி நெறியை வழங்கி வருகின்றது.

சாரணர் விதிமுறைகள், தலைமைத்துவ பயிற்சி, அனர்த்த காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கான முகாம் எவ்வாறு அமைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் வழங்கப்பட்டதுடன், பயிலுணர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வளவாளர்களினால் பதிலும், செயன்முறையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர் கலந்து கொண்டதுடன், செயலமர்விற்கு வளவாளராகவும், பயிற்சியாளர்களாகவும் ஓய்வு பெற்ற உணவு மருந்து பரிசோதகரும், சாரணர் பயிற்றுனர் தலைவர் (C) எஸ். தஸ்தகீர், சாரணர் பயிற்றுனர் தலைவர் (C) எம். அப்துல் சலாம் (அதிபர்), உதவி பயிற்றுனர் தலைவர் மேஜர் கே.எம். தமீம், சாரணர் ஜனாதிபதி விருது பெற்ற ஐ.எம். இஹ்ஸாஸ் ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.