
சட்டவிரோத மதுபானம் , கோடாவுடன் இருவர் கைது
கம்பஹா – ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரகொட்டுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ராகமை மற்றும் வெலிசர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 33 மற்றும் 56 வயதுடையவர்கள் ஆவர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 300 லீற்றர் சட்டவிரோத மதுபானம் , 2520 லீற்றர் கோடா மற்றும் 14 பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக ராகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளானர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்