சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஹேன வத்த பகுதியில் 101 லீற்றர் 250 மில்லி லீற்றர் (135 போத்தல்கள் ) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு, திம்பிரிகஸ்கடுவவையைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, இராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 12 கிராமப் பகுதியில் 225 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 2,345 லீற்றர் கோடாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராஜாங்கனை, யாய 12 கிராமப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.