க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : 56 பேர் கைது!
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைய, முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனைகளில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு மற்றும் பாணந்துறை – மோதரவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாணத்துறை – மோதரவில பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், போதைப் பொருட்களுடன் 35 பேர் கைதாகியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்