கேவில் – யாழ்ப்பாணம் இடையேயான தனியார் பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

-யாழ் நிருபர்-

யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான மேலுமொரு பேருந்து சேவையானது வெள்ளிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பேருந்து சேவையானது காலை 09.45 மணிக்கு கேவிலில் இருந்து புறப்பட்டு மருதங்கேணி, புதுக்காடு வழியாக யாழ்ப்பாணம் சென்றடைந்து, மீண்டும் மாலை 03.35 மணிக்கு யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கேவிலை சென்றடையும்.

இந் நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர், கிராம சேவையாளர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்