கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.

இந்தநிலையில்,  கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை இன்று வியாழக்கிழமை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க