குளிரூட்டப்பட்ட மாட்டிறைச்சிகள் பண்டிகை காலத்தில் விற்பனை

-அம்பாறை நிருபர்-

அம்பாறை – காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட மாட்டிறைச்சி கடைகளில் இன்று செவ்வாய்க்கிழமை குளிரூட்டப்பட்ட இறைச்சி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

திங்கட்கிழமை போயா விடுமுறை மற்றும் இன்று தைப்பொங்கல் தினம். மேலும் மாடுகள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஞ்சிய இறைச்சிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

குறித்த இறைச்சி வகைகள் மனித பாவனைக்கு உகந்ததா அல்லது இல்லையா என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை

குறித்த இறைச்சிக்கடைகள் இவ்வாறான பண்டிகைக்காலம் மற்றும் அதற்கு மறுநாட்கள் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM