
குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்
யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியைச்சேர்ந்த அண்ணாமலை ஜெயந்தன் (வயது – 38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே குளிக்கச் சென்றதாகவும் பின்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்