
குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் கெஹலிய
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானார்.
இதனையடுத்து, அவர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்