குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாகப் பெற்றுக்கொடுத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க