
கீரிமலையில் வெடி குண்டுகள் மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.
நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்தபோதே, இவ்வாறு குண்டுகள் அவதானிக்கப்பட்டன.
இந்நிலையில், காங்கேசன்துறை பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்திய நிலையில் ஆர்.பி.ஜி குண்டு மற்றும் 81 மில்லிமீற்றர் குண்டு என்பன மீட்கப்பட்டன.