
கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று புதன் கிழமை கையளிக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் இதனை கையளித்தார்.
2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்காளிக்க தகுதிபெற்றுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்