கிறிஸ்மஸ் சந்தைக்குள் புகுந்த கார் : இருவர் பலி!

ஜேர்மனி – Magdeburg நகரில் கிறிஸ்மஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது, கார் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன், 63 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

காரை செலுத்திச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியப் பிரஜையான கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 2006ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்றவர் எனவும், அவர் 50 வயதுடைய வைத்தியர், எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.