
கிண்ணியா ரேன்ஞர்ஸ் மைதானத்தின் கடினப்பந்து ஆடுகளத்தை காணவில்லை!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை பிரிவில் உள்ள ரேன்ஞர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில் அமையப் பெற்ற கடினப் பந்து ஆடுகளத்தை காணவில்லை, என வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடின பந்து ஆடுகளமானது, நல்லாட்சி அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.
தற்போது இரு வருடங்களுக்கு மேலாக அதனை காணவில்லை என்றும், இது தொடர்பிலான விசாரனைகளை முன்னெடுக்குமாறும், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.