கால் வீங்கிய நிலையில் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி இரணைமடுக் குளப்பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை வனஜீவராசிகள் திணைக்களமோ, அது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த யானை வேதனையுடன் அலைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானைக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்