காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’

காலி முகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு ‘கோட்டாபயகம’ என்று பெயர் சூட்டி, அறிவித்தல் பலகையொன்றையும் நாட்டியுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர் இரவு பகலாக அங்கே தங்கிவிட்டனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க