
காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம்
கம்பஹா – நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாதென்ன பகுதியில் உள்ள வீடொன்றின் அறையிலிருந்து நேற்று வியாழக்கிழமை காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மாளிகாதென்ன, வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்