காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!
கொழும்பு கொட்டஹேன பகுதியில், கடந்த வருடம் நவம்பர் 04 ஆம் திகதி முதல், காணாமல் போனதாகக் கூறப்படும், 69 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல் போனவரின் மகள் அளித்த புகாரின் பேரில், கொட்டஹேன பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
காணாமல் போனவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 071 – 8591571 அல்லது 011- 2431861 என்ற தொலைபேசி எண்கள் மூலம், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்