காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை அனுராதபுரத்தில் ஆரம்பம்
கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கை அனுராதபுரம் மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காட்டு யானைகளின் ஆபத்தை எதிர் நோக்கும் கிராம சேவகர் பிரிவுகள் சிலவற்றில் சமூக மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 12 காவலரண்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவலரண்களின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் அங்கு சிவில் பாதுகாப்புப் படையினரைக் கடமையில், ஈடுபடுத்தி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்