
காசாவின் கோரமுகத்தை உலகிற்கு காட்டிய சிறுவனின் புகைப்படத்திற்கு விருது
இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த சிறுவனின் புகைப்படத்திற்கு வேல்ட் பிரஸ் போட்டோ (World Press Photo) விருது கிடைத்துள்ளது.
சமர் அபு எலூஃப் என்ற பெண் நியுயோர்க் பத்திரிகைக்காக எடுத்த புகைப்படத்திற்கே இந்த மிக உயரிய விருதான வேல்ட் பிரஸ் போட்டோவின் முதல் பரிசு கிடைத்துள்ளது.
குறித்த புகைப்படத்தில் இருக்கும் மஹ்மூத் அஜ்ஜூர் என்ற 9 வயது சிறுவன் காசா மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து தோஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு அவனது இரு கைகளும் அகற்றப்பட்டன. தற்போது அஜ்ஜூர் தனது குடும்பத்தினருடன் தோஹாவில் வசித்து வருகிறான். அவர்கள் வசித்து வரும் சிறிய வீட்டில் வைத்து தான் எலூஃப், விருது பெற்ற இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.