
காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பாய்மரப் படகுகள்
-யாழ் நிருபர்-
காங்கேசன்துறைக்கு நேற்று வியாழக்கிழமை சென்னையில் இருந்து, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் இரவு 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன.
400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு “ராயல் மெட்ராஸ் படகு கிளப்” அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.
மேலும் இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
Beta feature
Beta feature