கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்!
இந்தியா – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் சென்னை சென்றுள்ளனர்.
அங்கு, திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் கனிமொழியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, ஈழத்தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் உரையாடினோம், என இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்