கத்தோலிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று புதன் கிழமை முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை அனைத்து கத்தோலிக்கர்களையும் கோரியுள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய கத்தோலிக்க வெகுசன தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

பாப்பரசருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காகக் கொழும்பிலுள்ள இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தில் விசேட நினைவேடு   வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்