
கண்டி மாவட்டத்தின் 32 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
ஸ்ரீ தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் கண்டிப் பகுதியைச் சுற்றியுள்ள 32 பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.
தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுவதால் இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்