கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு பிணை

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை அதிகாரியை, பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை 75,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த சிறைச்சாலை அதிகாரி, இக்கொலைச் சம்பவத்தில் 13 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் குற்றத்தில் ஈடுபட்டிருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத காரணத்தால் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்