கணவன் மற்றும் மனைவி மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

குருணாகல் – வெல்லவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீடொன்றினை இலக்கு வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 32 வயதுடைய கணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவத்தில் காயமடைந்த மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்