
கணவனை கொலை செய்த மனைவி
நுவரெலியா இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் நேற்று இரவு கத்திக்குத்துக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜிதபுர பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விஜித்தபுர மார்காஸ்தோட்டத்தில் வீட்டில் வைத்து கணவன் மனைவிக்கிடையே இரவு 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது. தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான பாத்திமா ரிஸ்வானாவை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.