கடுமையாக தாக்கப்பட்ட முதியவர் மரணம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் (வயது – 66) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து குறித்த முதியவர் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

கொலை தொடர்பில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தை யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று ஞாயிற்று கிழமை பார்வையிட்டதுடன் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.