கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
-பதுளை நீதவான்-
பதுளையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
எல்டப் கீழ் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டப் கீழ் பிரிவில் நபர் ஒருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 3750 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்